Friday, November 05, 2010

வித்யாசாகரின் பாடல் - நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற

ஏனோ எனக்கு வித்யாசாகரின் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். கர்ணாவில் மலரே மௌனமா முதல் குருவியின் தேன் தேன் வரை.  அதிலே எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு நூறாண்டுக்கு ஒரு முறை .
பாடல் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற
படம் : தாயின் மணிக்கொடி
பாடியவர் : கோபால் ஷர்மா
கேட்க ஆரம்பித்ததில் இருந்தே யார் இந்த குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது. நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டு பார்த்தேன். யாருக்கும் தெரியவில்லை. அப்புறம் கூகுளாண்டவரின் துணையோடு கோபால் ஷர்மா என்று கண்டு பிடித்தேன். ஒரு அருமையான காதல் டூயட் கேட்க நினைத்தால் முதலில் இந்த பாட்டை கேட்டுபாருங்கள். அருமையான வரிகள் உள்ள பாடல். வைரமுத்து என்றுதான் நினைக்கிறேன்.
'ஒரு  விரல்  என்னை  தொடுகையில்  உயிர்  நிறைகிறேன்   அழகா'
'அச்சப்பட  வேண்டாம்  பெண்மையே  எந்தன்  ஆண்மையில்  உண்டு  மென்மையே '
போன்ற வரிகளில் காதலோடு நல்ல தமிழையும் ரசிக்கலாம் .
மென்மையான பின்னணி இசையில் இதயத்தை வருடும் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்
 வரிகள்
M: நூறாண்டுக்கு  ஒரு  முறை  பூக்கின்ற  பூவல்லவா
இந்த  பூவுக்கு  சேவகம்   செய்பவன்  நானல்லவா
இதழோடு  இதழ்  சேர்த்து
உயிரோடு  உயிர்  கோர்த்து  வாழவா ..

(F: repeat first lines)

F: கண்ணாலனே  கண்ணாலனே  உன்  கண்ணிலே  என்னை  கண்டேன்
M: கண்மூடினால்  கண்மூடினால்  அந்நேரமும்  உன்னை  கண்டேன்
F: ஒரு  விரல்  என்னை  தொடுகையில்  உயிர்  நிறைகிறேன்  அழகா
M: மறு  விரல்  வந்து  தொடுகையில்  விட்டு  விலகுதல்  அழகா
F: உயிர்  கொண்டு  வாழ்கின்ற  நாள்  வரை  இந்த  உறவுகள்  வேண்டும்  மன்னவா ..

(நூறாண்டுக்கு)

M: இதே  சுகம்  இதே  சுகம்  எந்நாளுமே  கண்டால்  என்ன
F: இந்நேரமே இந்நேரமே  என்  ஜீவனும்  போனால்  என்ன
M: ம்ம் . . முத்தத்திலே  பல  வகை  உண்டு  இன்று  சொல்லட்டுமா  கணக்கு
F: இப்படியே  என்னை  கட்டிக்கொள்ளு  மெல்ல  விடியட்டும்  கிழக்கு
M: அச்சப்பட  வேண்டாம்  பெண்மையே  எந்தன்  ஆண்மையில்  உண்டு  மென்மையே

No comments:

Post a Comment