Sunday, November 14, 2010

Kavithaikal

                              பால்
என்றுமே குடிக்காத
பிள்ளையார் முன் குடத்தில்
ஏழை குழந்தைகளின்
ஏக்கத்தில் .

                  கோடீஸ்வரன்  
கோடீஸ்வரன் ஆவது  எப்படி?
புத்தகத்தை கூவிக்கூவி விற்றான்
தெருக்கோடியிலே . 

Sunday, November 07, 2010

ஒரு வார்த்தை பேசாமல்

ஒரு பெண் காதலை சொன்னால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா ?. அதுவும் சந்தோசமாக பாடினால் ? தனக்குள் காதலால் ஏற்பட்ட அவஸ்தைகளை வர்ணித்தால் ? அதுவும் ஸ்ரேயா கோஷல் போன்ற மனதை மயக்கும் குரல் என்றால்? கண்டிப்பாக கேட்கும் போதே மகிழ்ச்சியை கொடுக்கும் பாடல்.
பாடல் : ஒரு வார்த்தை பேசாமல்
படம் : பொய் சொல்ல போறோம்
பாடியவர் : ஸ்ரேயா கோஷல்
இசை : MG ஸ்ரீகுமார்
படத்தில் ஒரு சிறிய பாடலாக வரும். முழு பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
"புயல்  காற்று  வீசாமல்  பூகம்பம்  இல்லாமல்
  என்  நெஞ்சம்  உன்னிடம்  சாயுதடா. நான்  நில்  நில்  நில்  என்றாலும்  என்  மனம்  கேட்கவில்லை" என்று ஆண் மட்டுமே பாட கேட்டிருப்போம். ஆனால் பெண்ணின் குரலில் கேட்க தவறாதீர்கள் .

பாடல் வரிகள் :
ஒரு  வார்த்தை  பேசாமல்  ஒரு  பார்வை  பார்க்காமல்  உன்  மௌனம்  ஏதோ  செய்யுதடா 
புயல்  காற்று  வீசாமல்  பூகம்பம்  இல்லாமால்  என்  நெஞ்சம்  உன்னிடம்  சாயுதடா
 நான்  நில்  நில்  நில்  என்றாலும்  என்  மனம்  கேட்கவில்லை
 தினம்  சொல்  சொல்  சொல்  என்றாலும்  என்  உதடுகள்  பேசவில்லை
 ஆனால்  கூட  ஐயோ  இந்த  அவஸ்தைகள்  பிடிக்குதடா
 ஐயோ  ஐயோ  ஐயோ  எனக்கு  காதல்  வந்திருச்சி
 பையா பையா  பையா  எனக்கு  பயித்தியம்   புடிச்சிருச்சி  
===
ஓ ஓ  ஓ  எந்தன்  இரவே  நீயும்  அவனிடம்  சென்று  தூக்கம்  இல்லை  நெடுநாள் .. என்று  சொல்வாயோ  
ஓ ஓ  ஓ  எந்தன்  இரவே  நீயும்  அவனிடம்  சென்று  தூக்கம்  இல்லை  நெடுநாள் .. என்று  சொல்வாயோ  
 இமைகள்  ரெண்டும்  மூடும்  போதும்  உன்னை  யோசிக்க
 என்  இதயம்  என்னும்  புத்தகம்  தருவேன்  வாடா வாசிக்க
 சொல்லாமல்  போனாலும்  என்  காதல்  தெரியாதா 
கண்கள்  பேசும்  பாஷைகள்  உனக்கு  கண்ணா  புரியாத
  === ஓ ஓ  ஓ   எந்தன்  பகலே  நீயும்  அவனிடம்  சென்று  வெளிச்சம்  இல்லை  வெகு  நாள்  என்று  சொல்வாயோ
 ஐயோ  ஐயோ  ஐயோ  எனக்கு  காதல்  வந்திருச்சி
 பையா பையா  பையா  எனக்கு  பயித்தியம்   புடிச்சிருச்சி  
 ஹே  ஓ ஓ  ஓ  எந்தன்  பகலே  நீயும்  அவனிடம்  சென்று  வெளிச்சம்  இல்லை  வெகு  நாள்  என்று   சொல்வாயோ  
காற்றை  கேட்டு பூக்கள்  எல்லாம்  வாசம்  தருகிறத
 கடிதம்  போட்டு  கடலை  தேடி  nadhigaL  வருகிறதா
சொல்லாமல்  போனாலும்  என்  காதல்  தெரியாதா 
கண்கள்  பேசும்  பாஷைகள்  உனக்கு  கண்ணா  புரியாத
  
 ஐயோ  ஐயோ  ஐயோ  எனக்கு  காதல்  வந்திருச்சி
 பையா பையா  பையா  எனக்கு  பயித்தியம்   புடிச்சிருச்சி  

Friday, November 05, 2010

நான் போகிறேன் மேலே மேலே

ஜேம்ஸ் வசந்தனின் கண்கள் இரண்டால் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். பிறகு பசங்க படத்தில் ஸ்ரேயா கோஷலின் குரலில் ஒரு வெட்கம் வருதே மனதை வருடியது . அதனாலேயே நாணயம் படத்தை ஒரு மேலடிக்காக எதிர் பார்த்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.  ரொம்ப நாள் கழித்து எஸ். பி. பி , சித்ரா கூட்டணியில் வந்த அருமையான பாடல் .
பாடல் : நான்  போகிறேன்  மேலே மேலே
படம் : நாணயம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள் : எஸ். பி. பி , சித்ரா
நான் தினமும் கேட்கும் பாடல்களில் 80  சதவீதம் எஸ். பி. பி சார் பாடியதாக தான் இருக்கும். அதிலும் இளையராஜாவின் ஹிட் பாடல்களை எடுத்தால் அதில் எஸ். பி. பி அல்லது ஜானகியின் குரல் பெரும்பாலும் இருக்கும். ஜெயா டிவியின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியை நான் ஒரு வாரமும் தவற விட்டதில்லை .அந்த அளவு நான் எஸ். பி. பி ரசிகன் .அவரின் குறும்பும், அதிகமாய் அவர் கொடுக்கும் ஹம்மிங்கும் அட்டகாசமாய் இருக்கும். இதிலும் எஸ். பி. பி யும் ,சித்ராவும் பாடலின் இறுதியில் கொடுக்கும் ஹம்மிங் எனது நீண்ட நாள் ரிங் டோன்.

"வாராதோ அந்நாளும் இன்று" கு பிறகு அவரின்  ஹம்மிங்  குரல் உங்களை மயக்காமல் இருக்காது.

பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

வரிகள் :
Naan Poagiren Meley Meley
Boologamey Kaalin Keezhey
Vin Meengalin Koottam En Meley
Poovaaliyin Neeraippoley
Nee Sindhinaai Endhan Meley
Naan Pookkiren Panneer Pooppoley
Thadimaripponen Andrey Unnaippaarththa Naeram
Adaiyaalam Illaa Ondrai Kanden Nenjin Oram
Ean Unnai Paarthen Endrey Ullam Kelvikketkum
Aanaalum Nenjil Andha Naerathai Naesikkum
Naannaana Nannaa Nannaana
Naanaana Nannaa Nannaananaa
Naannaana Nannaa Nannaana
Naanaana Nannaa Nannaananaa (Naan)

Kannaadi Munney Nindren Thaniyaaga Naan Pesa
Yaarenum Jannal Thaandi Paarthaal Aiyo
Un Pakkam Thaazhppaal Poattum
Ada Ennul Nee Vandhaai
Kai Neettiththottu Paarthen Kaatrai Aiyo

En Veettil Neeyum Vandhu Serum Kaalam Ekkaalam
Poomaalai Seidhen Vaadudhey
Ennaththai Thedum Porvai Yaavum Saelaiyaagaadho
Vaaraadho Annaalum Indrey Haa..

Naa Naana Nannannaana Naa Naanannaa
Naa Naana Nannannaana Naa Naanannaa

Naa Naana Nannannaana Naa Naanannaa
Naa Naana Nannannaana Naa Naanannaa

En Thookkam Vendum Endraai
Tharamaatten Endreney
Kanavennum Kallachaavi Kondey Vandhaai
Vaarthaigal Thediththedi Naan Paesippaartheney
Ullathil Paesum Viththai Nee Thaan Thandhaai

Andraadam Poagum Paadhai Yaavum Indru Maatrangal
Kaanaamal Poanen Paadhiyil
Nee Vandhu Ennai Meettuchelvaai Endren
Ea Ea Kaalnoga Kaalnoga Nindren..

வித்யாசாகரின் பாடல் - நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற

ஏனோ எனக்கு வித்யாசாகரின் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். கர்ணாவில் மலரே மௌனமா முதல் குருவியின் தேன் தேன் வரை.  அதிலே எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு நூறாண்டுக்கு ஒரு முறை .
பாடல் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற
படம் : தாயின் மணிக்கொடி
பாடியவர் : கோபால் ஷர்மா
கேட்க ஆரம்பித்ததில் இருந்தே யார் இந்த குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது. நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டு பார்த்தேன். யாருக்கும் தெரியவில்லை. அப்புறம் கூகுளாண்டவரின் துணையோடு கோபால் ஷர்மா என்று கண்டு பிடித்தேன். ஒரு அருமையான காதல் டூயட் கேட்க நினைத்தால் முதலில் இந்த பாட்டை கேட்டுபாருங்கள். அருமையான வரிகள் உள்ள பாடல். வைரமுத்து என்றுதான் நினைக்கிறேன்.
'ஒரு  விரல்  என்னை  தொடுகையில்  உயிர்  நிறைகிறேன்   அழகா'
'அச்சப்பட  வேண்டாம்  பெண்மையே  எந்தன்  ஆண்மையில்  உண்டு  மென்மையே '
போன்ற வரிகளில் காதலோடு நல்ல தமிழையும் ரசிக்கலாம் .
மென்மையான பின்னணி இசையில் இதயத்தை வருடும் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்
 வரிகள்
M: நூறாண்டுக்கு  ஒரு  முறை  பூக்கின்ற  பூவல்லவா
இந்த  பூவுக்கு  சேவகம்   செய்பவன்  நானல்லவா
இதழோடு  இதழ்  சேர்த்து
உயிரோடு  உயிர்  கோர்த்து  வாழவா ..

(F: repeat first lines)

F: கண்ணாலனே  கண்ணாலனே  உன்  கண்ணிலே  என்னை  கண்டேன்
M: கண்மூடினால்  கண்மூடினால்  அந்நேரமும்  உன்னை  கண்டேன்
F: ஒரு  விரல்  என்னை  தொடுகையில்  உயிர்  நிறைகிறேன்  அழகா
M: மறு  விரல்  வந்து  தொடுகையில்  விட்டு  விலகுதல்  அழகா
F: உயிர்  கொண்டு  வாழ்கின்ற  நாள்  வரை  இந்த  உறவுகள்  வேண்டும்  மன்னவா ..

(நூறாண்டுக்கு)

M: இதே  சுகம்  இதே  சுகம்  எந்நாளுமே  கண்டால்  என்ன
F: இந்நேரமே இந்நேரமே  என்  ஜீவனும்  போனால்  என்ன
M: ம்ம் . . முத்தத்திலே  பல  வகை  உண்டு  இன்று  சொல்லட்டுமா  கணக்கு
F: இப்படியே  என்னை  கட்டிக்கொள்ளு  மெல்ல  விடியட்டும்  கிழக்கு
M: அச்சப்பட  வேண்டாம்  பெண்மையே  எந்தன்  ஆண்மையில்  உண்டு  மென்மையே

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். chemical  கம்பனியில் வேலை பார்க்கும் எனக்கு வேலை முடிந்து வரும் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்கள் கேட்பேன். எத்தனையோ நாள் எனது தலை வலி இசையால் நிவாரணம் அடைந்து இருக்கிறது . இளையராஜா , வித்யாசாகர் போன்றவர்களின் மெலடி பாடல்களை கேட்கும்போது , மனதுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து இருக்கிறேன். அந்த அனுபவங்களை உங்களுடன் பரிமாறிகொள்கிறேன்.
முதலில் எனக்கு பிடித்த பாடலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

1 . எனக்கு பிடித்த பாடல்
   படம் : ஜுலி கணபதி
  இசை : இளையராஜா
 பாடியவர் : ஸ்ரேயா கோஷல்

    நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த காலத்தில், எதேச்சையாக ராஜ் டிவியில் இந்த படம் பார்த்தேன் அப்போதுதான் முதன் முதலாக இந்த பாடலை கேட்டேன். இன்று வரை கேட்டு கொண்டே இருக்கிறேன்.
ஸ்ரேயா கோஷலின் குரலில் ஏதோ இருப்பதாக என் நண்பன் முன்பே வா பாட்டு கேட்டபோது சொன்னான். அவனுக்கு இந்த பாட்டை சிபாரிசு செய்ததில் இருந்து அவன் என்னை விட பெரிய விசிறி ஆகி விட்டான் ஸ்ரேயா கோஷலுக்கு. இளையராஜா என்றும் நான் நேசிக்கும் மனிதர்களில் ஒருவர். எனக்கு இசையைப்பற்றி ஒன்றும் தெரியாது. எந்த பாடல் எந்த ராகம் என்று கூட தெரியாது. ஆனால் பாமரனும் சங்கீதத்தின் சுவையை அனுபவிக்க வைத்ததில் அவருக்கு இணை யாரவது உண்ட என்று தெரியவில்லை. இசை ஒரு மருந்து என்று பாட புத்தகத்தில் படித்ததை நிஜத்தில் உணர வைத்தவர். இந்த பாடலும் அந்த ரகம் தான். மென்மையான குரலும் , மென்மையான இசையும் சேர்ந்த மெல்லிசையினை அனுபவியுங்கள்.
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
http://v2knetwork.net/mp3/j/Julie_Ganapathy_www.shakthi.fm/shakthi.FM%20%20-%20%20Enakku%20Pidiththa%20Paadal.MP3
வரிகள்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்