Sunday, December 26, 2010

எனக்கு பிடித்த பாடல்கள் - 2010

2010 இல் வெளியான பாடல்களில் எனக்கு பிடித்தவை :
1 . உன் பேரை சொல்லும்போதே - அங்காடி தெரு
   இந்த பாடல் வெளியான போதில் இருந்தே கேட்டு கொண்டு இருந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக என் மொபைலில்  இருந்த பாடல். ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் குரலில் காதல் வழியும் பாடல்.
 " உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்"
" நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்"
  முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்" அருமையான வரிகள்.

2 . என் காதல் சொல்ல - பையா
   பொதுவாக யுவன் பாடும் பாடல்கள் நான் விரும்பி கேட்க மாட்டேன். இந்த பாடும் வெளிவந்து நீண்ட நாட்களாக நான் கேட்காமலே இருந்தேன். ஆனால் படம் வந்த பிறகு அது படமாக்கப்பட்ட விதத்தை பார்த்த பிறகும், வரிகளை கேட்ட பிறகும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்து விட்டேன்.
3 . மன்னிப்பாயா - விண்ணைத்தாண்டி வருவாயா 
  பொதுவாக  ரஹ்மான் பாட்டு லடே பிக் அப் ஆகும் என்று கொஞ்ச நாள் கேட்காமலே இருந்தேன். ஆனால் கேட்க ஆரம்பித்ததில் இருந்து தினமும் கேட்டு கொண்டு இருக்கிறேன். தாமரை எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியை. அதுவும் ஈழப்போர் நடந்த சமயத்தில் அவர் பேசியவைகளை கேட்க அருமையாக இருக்கும். காங்கிரசையும் சோனியாவையும் அவர் கேட்கும் கேள்விகள், ஈழத்து வலிகளை அவர் விவரிக்கும் விதம் என நான் அவர் ரசிகன். அவருடைய  பாடலில் நல்ல தமிழ் இருக்கும். இந்த பாடலிலும் வரிகள் அருமையாக இருக்கும்.
" ஒரு நாள் சிரித்தேன் ஒரு நாள் வெறுத்தேன்
  உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேன் மன்னிப்பாயா"
 ஸ்ரேயா கோஷலின் தேன் குரலில் மனதை மயக்கிய பாடல்.
4  . கிளிமஞ்சாரோ - எந்திரன்
     சங்கீத மகா யுத்தம் பார்க்க தொடங்கிய பிறகு சின்மயி பிடித்துப்போனதால் எந்திரன் படப்பாடல்களில் முதலில் கேட்க ஆரம்பித்த பாடல். சின்மயி குரலில் அவர் பாட்டுக்கு பாட்டு வாய்ஸ் மாடுலேசன் செய்வதாக தோன்றுகிறது.
5 . கை வீசி - நந்தலாலா
  படத்தில் வரும் என்று எதிர்பார்த்த  பாடல், ஆனால் வரவில்லை. இதுவும் அங்காடி தெரு போல பாடல் எப்போதோ வெளியானது. அப்பொழுதில்  இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். விஜய் யேசுதாஸ், ஸ்வேதா (சுஜாதா மகள் ) பாடிய பாடல். அந்த கால ராஜா டூயட் திரும்ப கேட்ட மாதிரியான உணர்வை கொடுத்தது.
நிஜமாகவே ஒரு மனதை மயக்கும் மெலடி.
6 . ஜிங்கு சிக்கு - மைனா
  நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மண் வாசம் வீசும் கிராமிய பாடலை கேட்ட திருப்தி கொடுத்த பாடல்.
7 . நான் போகிறேன் - நாணயம்
   SPB , சித்ரா கூட்டணியில் வந்த அருமையான பாடல். இந்த பாடல் பற்றி  பாடல் வரிகளுடன் ஒரு போஸ்ட் எழுதியுள்ளேன்.
8 . இது வரை இல்லாத - கோவா
      கோவா என்ற மொக்கை படத்தில் உருப்படியான ஒன்று இந்த பாடல்.ஆண்ட்ரியா   போலவே அவரது குரலும் செசியாக இருக்கும். airtel சூப்பர் சிங்கர் போட்டியில் வென்ற அஜீசும் நன்றாக பாடி இருப்பார் .
9  . பூக்கள் பூக்கும் - மதராசபட்டினம் 
     GV  பிரகாஷின் இந்த வருட மெலடி இது. பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். இந்துஸ்தானி, கர்நாடிக்,  வெஸ்டர்ன் எல்லாம் இந்த பாட்டில் வரும் என்றார்கள். எனது அதை பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் கேட்டுக்கொண்டே இருக்க வைத்த பாடல் இது.
" நேற்று வரை நேரம் போக வில்லையே
  உனதருகே நேரம் போத வில்லையே:"
"இரவும் விடிவதில்லையே அது விடிந்தால் பகலும் முடிவதில்லையே "
"இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்"
ஹரிணி, ரூப் குமாரின் குரலின் அருமையான வரிகள்.
 

Sunday, December 12, 2010

வித்யாசாகரின் பாடல்கள்

பாடல் - மௌனமே பார்வையாய்
படம் - அன்பே சிவம்
பாடியவர்கள் - எஸ். பி. பாலசுப்ரமணியம், சந்த்ராயி

இந்த பாடல் படத்தில் வராது. ஆனால் பூ வாசம் பாடலுக்கு கொஞ்சமும் சளைக்காத மெலடி இது. நான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தீவிர ரசிகன். அதனால் எந்த படத்தில் பாலா சாரின் பாடல் வந்தாலும் கேட்காமல் விட மாட்டேன். இப்போது ஆடுகளத்தில் அய்யய்யோ நெஞ்சு அலையுதடி பாடல் தான் இப்பொது நான் முணுமுணுக்கும் பாடல். ஆடுகளத்தில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் பாடும் யாத்தே யாத்தே , ஒத்த சொல்லால போன்ற பாடல்களும் நன்றாகவே இருக்கிறது. இந்த மௌனமே பாடல் அந்த கால ராஜா பாடலை போன்ற ஒரு இதமான மெலடி . எஸ்.பி. பியின் கொஞ்சும் குரலில் பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்.
பாடல் வரிகள் :
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam,
Punnagai putthagam vaasikkindroam,
Yennillae unnaiyae swaasikkindroam,
Ithu ullam pala vannangalai allum,
Sila ennangalai sollum, thullum, kannammaa,
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam, kannammaa...

Jananam thanthaal, salanam thanthaal,
Kaadhal moliyil,
Maranam konjam, mayakkam konjam,
Oonthan tharavil,
Endrum vaalga vaalga intha naerangal,
Sugam saerga saerga varum kaalangal,
Malar soolga soolga ivar paadhaigal,
Dhinam velga velga ilam aasaigal,
Oru seiythi, adi nee enbathenn paathi,
Ini naan enbathum meethi, thaethi sollammaa,
Mounam paarvaiyaay...
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam,

Ilakkanam udaitthathum kavithai varum,
Iravinai thudaitthathum kanavu varum,
Swarangalai thiranthathum isai malarum,
Oonarvilae karainthathum kalai valarum,
Moli thoandraatha kaalatthil nulainthaal aena?
Vili jaadaigal paesiyae nadanthaal aena?
Endrum vaalga vaalga intha naerangal,
Sugam saerga saerga varum kaalangal,
Malar soolga soolga ivar paadhaigal,
Dhinam velga velga ilam aasaigal,
Oru vellinatthai vallinamum kai saera,
Unn kaampiyatthai tholi, oonthan kannaalae paesu,
Mounamae paarvaiyaay paesi kondoam,
Naanamae vannamaay poosi kondoam,
Punnagai putthagam vaasikkindroam,
Yennillae unnaiyae swaasikkindroam,
Ithu ullam

pala vannangalai allum,
Sila ennangalai sollum
thullum
kannammaa

வித்யாசாகர் பாடல்கள் - பூ வாசம் - அன்பே சிவம்

முதலில் எனக்கு பிடித்த எல்லா வித்யாசாகர் பாடல்களையும் பகிர்ந்து கொள்கிறேன். பிறகு ராஜா பாடல்களை பற்றி பகிர்ந்து கொள்கிறேன். இது கொஞ்ச நாளில் முடிந்து விடும். அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனக்கு சங்கீதம் சுத்தமாக தெரியாது. அதனால் ஒரு பாமரனுடைய பார்வையில் என் ரசனையை எழுதுகிறேன்.
1 . பூ வாசம் - அன்பே சிவம்
இசை - வித்யாசாகர்
பாடியவர்கள்  - விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
 அன்பே சிவம் எனக்கு மிக மிக பிடித்த திரைப்படம். இது வரை அந்த படத்தை 20 தடவையாவது பார்த்திருப்பேன். எனக்குள் கொஞ்சம் சிகப்பு சிந்தனைகள் தோன்ற அந்த படம் முக்கிய காரணம். அன்பை அனைவரின் மனதுக்குள் ஆழமாக விதைத்த அந்த படத்தில் இசையும் அருமையாக இருக்கும். அதில் காதலும் அழகாக இருக்கும். வித்யாசாகர் இசை அமைத்த படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம் இது. கமலை நான் ரசிக்க ஆரம்பித்த படங்களில் ஒன்று.
அதில் இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். கமலுக்கும், கிரணுக்கும் காதல் மலர்வதை விவரிக்கும் பாடல். ஒரு ஓவியனின் காதலை அழாகாக வரிகளில் விவரித்து இருப்பார்.
உயிரல்லதெல்லாம்  உயிர்  கொள்ளும்  என்றால் ,
உயிருள்ள  நானோ  என்னாகுவேன் ?

பாடலை ரசிக்க சொடுக்கவும். http://www.mediafire.com/file/edbnahtzzb1/Poo%20Vaasam%20[Tamilmp3corner].mp3
பாடல்  வரிகள் :
பூ  வாசம்  புறப்படும்  பெண்ணே ,
நான்  பூ  வரைந்தால் ,
தீ  வந்து  விரல்  சுடும்  கண்ணே ,
நான்  தீ  வரைந்தால் ,

உயிரல்லதெல்லாம்  உயிர்  கொள்ளும்  என்றால் ,
உயிருள்ள  நானோ  என்னாகுவேன் ?
உயிர்  வாங்கிடும்  ஓவியம்  நீயடி ...

ம்ம் , புள்ளி  சேர்ந்து ,  புள்ளி  சேர்ந்து  ஓவியம் ,
உள்ளம்  சேர்ந்து , உள்ளம்  சேர்ந்து  காவியம் ,
கோடு  கோடு  ஓவியத்தின்  பாகமே ,
ஊடல்  போட  காதல்  என்று  ஆகுமே ,
ஒரு  வானம்  வரைய  நீல   வண்ணம் ,
நம்  காதல்  வரைய  என்ன  வண்ணம் ?
என் வெட்கத்தை   விரல்   தொட்டு ,
விரலேண்டும்  போல்  கொண்டு ,
நம்  காதல்  வரைவோமே , வா ,