Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, November 02, 2011

சிறு கவிதைகள்

வெயில்
மதிய வேலையில் நடக்கும்பொழுது
வெயில் என்று மூடிக்கொள்கிறாய் முகத்தை
உன் முகம் காணாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரிக்கிறது சூரியன்.

துரதிஷ்டம் 

 உன்  முகம் காணாத நாட்களை
மறுநாள் தேதி கிழிக்கும்போழுது பார்க்கிறேன்
ராசிபலனில் துரதிஷ்டம்

வாசனை

நீ தலை குளித்தவுடன்
எழும் வாசனையில்
பூக்கள் தலைக்குனிவுடன்
ஒப்புக்கொள்கிறது தன தோல்வியை .

நீலம்
வான நீல வண்ணம்
எனக்கும் பிடிக்கும் என்றாய்
இப்போதெல்லாம் நான் வானத்தை
பார்க்கிறேன் பொறாமையாய். 




செருப்பு
காலம் காலமாக மிதிபட்டே வந்தபோதும்
கல்லும் முள்ளும் குத்தி காயப்பட்டபோதும்
வாசலிலேயே நிறுத்தி அவமானப்படுத்தப்பட்ட போதும் 
போராட திராணியற்ற  செருப்பும்  
தாழ்த்தப்பட்ட சாதியோ !
பெண் சிசு 
வகை வகையாய் வரிசையுடன்
வளைகாப்பு கொண்டாடி
குடும்பம் கூடி சீட்டெடுத்து
செல்லப்பெயர் கண்டெடுத்து
குங்கும பூவும் இன்ன பிறவும்
குடம் குடமாய் கொண்டு வந்து
மாநகரில் மிகச்சிறந்த
மருத்துவமனையில் வந்துசேர்த்து
தாய்சேய் நலப்பிரிவில்
ஸ்கேன் பண்ணி பார்த்த பிறகு
தாய் மட்டும் நலமா
வந்து சேர்ந்தா வீட்டுக்கு .

புத்தாண்டு கொண்டாட்டம்

யாம வேலையில் மிகுந்தது
வாலிபர் கூட்டமங்கே
விண்ணைப் பிளந்தது அதிர்வேட்டுகள் நாதம்
உணவு கொட்டி விளையாடினோர் ஓர் புறம்
ஆங்கே கூழுக்கும் வழியில்லை சேரிப்புறம்
கட்டித்தழுவினார் இருபாலர் வாஞ்சையோடு
அங்கே கதறி அழுதது நாட்டின் கலாச்சாரம்
Happy New Year  என ஐநிலங்களிலும்
பறந்தது குறுஞ்செய்தி - ஆங்கே
விரைந்து அடிக்கப்பட்டது தமிழுக்கு இறுதிமணி
எத்தனையாண்டு பல வந்தாலும்
இக்காட்சி மாறாது என் தாய்த்திருநாட்டில். 

இணைய வலை

படம் பார்க்கலாம் என கிளம்பி
பளபள ஆடை உடுத்தி
பட்டென்று அமர்ந்தான் கணினி முன்னே.


அழுக்கு லுங்கி அணிந்துகொண்டு
வாராத தலையுடன் துலக்காத பல்லுடன்
காட்டான்குப்பதில் அமர்ந்து கடகடவென அடித்தான்
"I m Victor frm USA"- குப்பனாகிய அவன் .

சில வருடம் மிதிவண்டி
சில நாள் நண்பனின் பைக்
பல நாள் பின்தொடர்வு என
பல வலை வீசியும் மயங்காத அவள்
ஒரே வாரத்தில் வீழ்ந்தால்
இணைய வலையில்.

இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்
பல நிறுவனங்கள் அறிவிப்பு
அந்த தளம் எந்த ஊரில் என அறியாமையில்
குக்கிராமத்தில் நான்.

தேர்வில் என்பதுக்கு மேல்  என
காலம்காலமாக அப்பாவிடம் விட்ட கதை
கந்தலாகிப்போனது இணையத்தில்
முடிவுகள் பார்த்த அவரிடம். 

வாலிப வாரம்

சித்திரை முதல் பங்குனி வரை
எந்தத் திங்களிலும் புத்தகத்தை தொடாமல்
நித்திரையிலே மூழ்கி

வாழ்விலே என்றாவது முன்னேறுவேன் என
செவ் வாயாலே வெறும் வார்த்தைகளை வீசி

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது  என
கிடைத்த பெண்களின் பின் சுற்றித்திரிந்து

சூரிய குடும்பத்திலே பெரிய கோள் வியாழன்
எனது ஊரிலே பெரிய ஆள் நான் என
வாய் நிறைய வியாக்கியானம் பேசி

வெள்ளி நிற வண்டியிலே இரவு முழுதும்
ஊர் சுற்றி திரிந்து ஓய்ந்து

'' இந்த சனி பிடிச்ச கழுத எங்க உருப்பட போவுது" என
ஊர் உலகத்திடம் வசவுகள் வாங்கி

தன வாழ்விலும் ஞாயிறு மலருமென
கனவிலே மிதந்தான் கல்லாத மூடன். 

Sunday, November 14, 2010

Kavithaikal

                              பால்
என்றுமே குடிக்காத
பிள்ளையார் முன் குடத்தில்
ஏழை குழந்தைகளின்
ஏக்கத்தில் .

                  கோடீஸ்வரன்  
கோடீஸ்வரன் ஆவது  எப்படி?
புத்தகத்தை கூவிக்கூவி விற்றான்
தெருக்கோடியிலே .