Wednesday, November 02, 2011

வாலிப வாரம்

சித்திரை முதல் பங்குனி வரை
எந்தத் திங்களிலும் புத்தகத்தை தொடாமல்
நித்திரையிலே மூழ்கி

வாழ்விலே என்றாவது முன்னேறுவேன் என
செவ் வாயாலே வெறும் வார்த்தைகளை வீசி

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது  என
கிடைத்த பெண்களின் பின் சுற்றித்திரிந்து

சூரிய குடும்பத்திலே பெரிய கோள் வியாழன்
எனது ஊரிலே பெரிய ஆள் நான் என
வாய் நிறைய வியாக்கியானம் பேசி

வெள்ளி நிற வண்டியிலே இரவு முழுதும்
ஊர் சுற்றி திரிந்து ஓய்ந்து

'' இந்த சனி பிடிச்ச கழுத எங்க உருப்பட போவுது" என
ஊர் உலகத்திடம் வசவுகள் வாங்கி

தன வாழ்விலும் ஞாயிறு மலருமென
கனவிலே மிதந்தான் கல்லாத மூடன். 

No comments:

Post a Comment