Sunday, December 12, 2010

வித்யாசாகர் பாடல்கள் - பூ வாசம் - அன்பே சிவம்

முதலில் எனக்கு பிடித்த எல்லா வித்யாசாகர் பாடல்களையும் பகிர்ந்து கொள்கிறேன். பிறகு ராஜா பாடல்களை பற்றி பகிர்ந்து கொள்கிறேன். இது கொஞ்ச நாளில் முடிந்து விடும். அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனக்கு சங்கீதம் சுத்தமாக தெரியாது. அதனால் ஒரு பாமரனுடைய பார்வையில் என் ரசனையை எழுதுகிறேன்.
1 . பூ வாசம் - அன்பே சிவம்
இசை - வித்யாசாகர்
பாடியவர்கள்  - விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
 அன்பே சிவம் எனக்கு மிக மிக பிடித்த திரைப்படம். இது வரை அந்த படத்தை 20 தடவையாவது பார்த்திருப்பேன். எனக்குள் கொஞ்சம் சிகப்பு சிந்தனைகள் தோன்ற அந்த படம் முக்கிய காரணம். அன்பை அனைவரின் மனதுக்குள் ஆழமாக விதைத்த அந்த படத்தில் இசையும் அருமையாக இருக்கும். அதில் காதலும் அழகாக இருக்கும். வித்யாசாகர் இசை அமைத்த படங்களிலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம் இது. கமலை நான் ரசிக்க ஆரம்பித்த படங்களில் ஒன்று.
அதில் இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். கமலுக்கும், கிரணுக்கும் காதல் மலர்வதை விவரிக்கும் பாடல். ஒரு ஓவியனின் காதலை அழாகாக வரிகளில் விவரித்து இருப்பார்.
உயிரல்லதெல்லாம்  உயிர்  கொள்ளும்  என்றால் ,
உயிருள்ள  நானோ  என்னாகுவேன் ?

பாடலை ரசிக்க சொடுக்கவும். http://www.mediafire.com/file/edbnahtzzb1/Poo%20Vaasam%20[Tamilmp3corner].mp3
பாடல்  வரிகள் :
பூ  வாசம்  புறப்படும்  பெண்ணே ,
நான்  பூ  வரைந்தால் ,
தீ  வந்து  விரல்  சுடும்  கண்ணே ,
நான்  தீ  வரைந்தால் ,

உயிரல்லதெல்லாம்  உயிர்  கொள்ளும்  என்றால் ,
உயிருள்ள  நானோ  என்னாகுவேன் ?
உயிர்  வாங்கிடும்  ஓவியம்  நீயடி ...

ம்ம் , புள்ளி  சேர்ந்து ,  புள்ளி  சேர்ந்து  ஓவியம் ,
உள்ளம்  சேர்ந்து , உள்ளம்  சேர்ந்து  காவியம் ,
கோடு  கோடு  ஓவியத்தின்  பாகமே ,
ஊடல்  போட  காதல்  என்று  ஆகுமே ,
ஒரு  வானம்  வரைய  நீல   வண்ணம் ,
நம்  காதல்  வரைய  என்ன  வண்ணம் ?
என் வெட்கத்தை   விரல்   தொட்டு ,
விரலேண்டும்  போல்  கொண்டு ,
நம்  காதல்  வரைவோமே , வா ,

No comments:

Post a Comment